Oct 26, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #104:

இறைவனை நோக்கிநாம்

    ஓரடி வைத்தால்

இறைவனடி பத்துவைப்

    பான்.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

பித்தன் 84.

பிறப்பிறப்பென்னும்

மாயச்சுழலில்

சுழலுகின்ற மானிடரே

பிறப்பிலென்ன சுகம்

கண்டோம்

இறபபிலென்ன துக்கம்

கண்டோம்

பிறந்தபோது நம்மைக்

கொஞ்சியவர்கள்

இறந்தபின் நம்மை

எரிப்பார்கள்

கொஞ்சியதையும்

நாமறியோம்

எரிப்பதையும்

யாமறியோம்

முற்பிறவியின்

செயல்களினால்

இருவிலங்கிட்டுப்

பிறக்ஙின்றோம்

பாபத்திற்கோர் விலங்கு

புண்ணியத்திற்கோர்

விலங்கு

விலங்குகளைத்

தகர்த்தெரிய

பாவத்தை விலக்கினால்

புண்ணியம் சேர்ந்திடும்

புண்ணியம் விலக்கினால்

பாபம் சேர்ந்திடும்

கணக்குகளை சரிசெய்ய

வழியின்றித்

தவிக்கின்றோம்

கணக்காயர் உண்டு

புகன்றிடுவேன்

கேட்டிடுவீர் நல்லதோர்

குருநாதன் பாதத்தினை

சரணடைந்தால்

விலங்குகள் தகர்ந்து

பேரின்பநிலையைநாம்

அடைந்திடலாம்

நிச்சயமாய்.

 

ராலி க. நி. தெக்காலம்  #407

நிலம்நீர் விசும்புத்தீ

      என்றெதிலும் என்றும்

கலந்தெங்கும் உயிராய்

      உணர்வாய் மேவி

உலகாய்த் தோன்றுமறிவு

      அறியஅயன்  தலைஉண்

கலனாய்க் கொண்டானை ராலி

      கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #408

தோன்றும் பொருளிலும்

      தோன்றாப் பொருளிலும்

ஈன்ற தாயன்பினிலும்

      பெரிதும் மனமுவக்கும்

சான்றோர் சொல்லிலும்

      வாழ்பொருளறிய புரம்

மூன்றும் எரித்தானை

      ராலி ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #409

மறைவாசகம் தரும்

      தொல் ஒலிவடிவாய்

குறையிலாது உலகில்

      காண் பொருளாய்

உறையும் உயிரை

      அறிய மலைமகட்கு

இறையை ராலி

      இறைஞ்சுவ தெக்காலம்?

 

பித்தன் 85.

தானமறியேன்

த்யானமறியேன்

யோகமறியேன்

தந்திரமறியேன்

தோத்திர

மந்திரமறியேன்

பூஜையறியேன் ந்யாஸ

யோகமறியேன்

நீயேகதி நீயேகதி நீ

மட்டுமேகதி பவானி.

(ஆதிசங்கர் பவானி  அஷ்டகம் 2 ம் ஸ்லோகம்)

 

Sep 20, 2016

பித்தன் 38.

அன்னையின் அடிவயிற்றில் அழகாக குடியிருந்தேன்

மண்ணை நான் கண்டவுடன் மாயை என்னைக் கவ்வியது

விண்ணை நான் கண்டபோது

விந்தையான நிலவை கண்டேன்

அன்னை அளித்த பாலும் சோரும் அமுதமாக இனித்தது.

தந்தையின் அன்பு என்னை தத்தளிக்க வைத்தது

அன்பான மனைவி வருகை என்னை அதிசயிக்க வைத்தது

தந்தையாக எனை மாற்றி வாரிசுகள் வந்தன

அன்னையின் மடியில் உறங்கிய நான்

இன்னும் ஓர்நாள் மண்ணில் உறங்கிப் போனேன் மறுபடி

என்னைக்காண கூடியது மற்றும் ஓர் கூட்டம்

விந்தையான இதைதான் வாழ்க்கை என்பதா.

 

SKC:

சாமகானத்தில் தசமுகன் சங்கடம் தீர்த்து

ஏமநாதனை தம் இசையால் ஈர்த்த – வாமதேவனை

வந்தித் திருப்பேனே யன்றி வாழ்வில்

நிந்தித்தல் ஏதும் இலன்.

 

ராலி க. நி. தெக்காலம்  #395

சென்று மீண்டும்

    வந்து புலனைந்தும்

வென்று அகக்கண்

    விழிக்கும் பேருண்மை

ஒன்று பெறுமாவல்

    பெற நால்வர்க்கு

அன்றுரைத்தானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

SKC:

தென்னவன் திசை நோக்கி

தினம் அவன் அருளாலே

முன்னோரை வணங்கி

முழு மனதாய் துதித்து

பின்னர் வரும் வேளை

பிறை சூடிய பெண்ணை

எண்ணியே கொலு வைக்க

ஏற்றதுவும் இக்காலம்.

 

SKC:

வாலிக்கு வந்த வரம் எதிர்

வருவோனின் பாதி பலம்

கூலிக்கு கவி எழுதும்

கூட்டத்தின் நடுவில்

ராலிக்குத் தந்த வரம் கவி

ராப்பகலாய் புனையும் திறம் அருள்

பாலிக்க பாற்கடலில்

பள்ளி கொண்ட திரு

மாலுக்கும் மகிழ்வு தரும்

மாசில்லா இவர் கவிதை.

SKC:

மன்னார் குடி அமர்ந்த மாலன் ராசகோபாலன்

சொன்னால் வேதமென சொல் பணிவேன் எந்நாளும்

 

ராலி க. நி. தெக்காலம்  #396

எத்தனை யோபிறவி

    எடுத் தெடுத்து

அத்தனையிலும் தொடர்

    நூல் போலும்

சித்தானந்தப் பொருள் தேட

    விடை யேறும்

வித்தகனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Sep 15, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #16:

உன்னைச் சிறிதேனும்

      நம்பாது தன்செயல்

தன்னைநம் பும்கசிபு

      வையே கிழித்தநீ

உன்னையும் நம்பாது

      என்னையும் நம்பாத

என்னைக் கிழிப்பது

      என்று?

 

பித்தன் 32.

இச்சையுடன் பத்தினியை பக்கத்திலே நிறுத்தி

அச்சமின்றி அரிசிதனை இருவேளை தீயிலிட்டு

முச்சந்தியையும் முனகாமல் நீ முடித்தால்

மிச்சமுள்ள நாட்களை நீ மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம்

 

பித்தன் 33.

(ஒரு கிராமத்தின் கற்பனை).

காவிரியில் நீராடி காலாற நான் நடக்க

ஆவியுடன் காபிதனை என் மனைவி தானளிக்க

ஆவிபறக்கும் செய்திகளை எந்தை தான்படிக்க

நீவிவிட்ட கூந்தலுக்கு எண்ணையை என் தாயளிக்க

கூவிவிற்கும் காய்கனியை என் அத்தை தான் வாங்க

தாவிக்குதித்து பாண்டியை என் மகளாட

பாவிப்பயல் படிக்காமல் மிதிவண்டியில் என் மகன் ஓட

காவிப்பல் தெரிய வெற்றிலையை என் பாட்டி இடிக்க

பாவிஎமன் வந்திடுவான் கூட்டுக்குடும்பம் தனைக்கலைக்க

கூவிடுவீர் அதற்குமுன் கோவிந்தன் நாமம் ஆயிரத்தை.

 

பித்தன் 34

பத்தாம் வயதினிலே குறும்புகளை நிறுத்தி

இருபதாம் வயதினிலே கல்விதனை கற்று

முப்பதாம் வயதினிலே அம்மிதனை மிதித்து

நாற்பதாம் வயதினிலே நன்மக்களை பெற்று

ஐம்பதாம் வயதிலே அளவுடன் பொருள் சேர்த்து

அறுபதாம் வயதினிலே அலுவலகம் தான் விடுத்து

எழுபதாம் வயதினிலே இந்திரியங்கள் பழுதடைந்து

என்பதாம் வயதை நான் அடையுமுன் எனைக்

காக்க ஒரு குரு வருவாரா எனக் காத்திருப்பேன் பக்தியுடன்.

 

பித்தன் 35.

பாசமுடன் பசு ஒன்று வளர்த்தேன் பால் அளித்தது

நேசமுடன் நாய் ஒன்று வளர்த்தேன் வீட்டை காத்தது.

தாஸனாக கிளி ஒன்று வளர்த்தேன் திரும்ப பேசியது

ஆசையுடன் காளை ஒன்று வளர்த்தேன் நிலத்தை உழுதது

எனை வளர்த்த இறைவனுக்கு நான் என்ன அளிப்பேன் நின்

நாமம்தனை ஜபிப்பேன் காத்தருள் புரிந்திடுவாய்.

 

SKC:

மெட்டுக்குப் பாட்டெழுதி

மீதியை நூலாக்கி

கட்டுக் கட்டாய் விற்கும்

கவிஞர்கள் நடுவினிலே

எட்டும் அறிவு வரை

ஏற்றமிகு தமிழில்

இட்டுக் கட்டி இங்கு

என்னால் இயன்றதனை

தொட்டெழுதப் பணித்தவனை

தும்பிக்கை நாதனை தலை

குட்டிப் பணிந்து

கும்பிட்டு அவன் தாளை

விட்டு விடாது என்

வினை தீர்க்கப் பணிந்திடுவேன்.

 

ராலி க. நி. தெக்காலம்  #389

காமமும் கோபமுமாய்ச்

    செல்லும் வாழ்வு

ஈமச்செயலுடன் முடியும்

    சட்டென சற்றும்

தாமதமிலாது நல்வழிநாட

    ராலி சடையுள்

சோமனை வைத்தானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #390

இயங்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

மயக்கும் பொருளில்

    எலாம் உள்ளிருந்து

தயங்காது தருணத்தில்

    அருளும் அட்ட

புயங்கப் பிரானை ராலி

    பிடிப்ப தெக்காலம்?

 

BKR:

காரணமே இன்றிக் கருணைமிகக் கொண்டுநமைப்

பூரண மாக்கும் புனிதனவன் – நாரணனும்

நான்முகனும் காணாத சோதியாய்ப்  பூமியொடு

வான்முகமாய் நின்ற  சிவன்.

 

BKR:

தடியால் அடித்தாலும் நீர்விலகா தங்ஙனமே

படியாது பாய்மனமி ருந்தும் – அடியேனை

நாளுமே நீங்கார் குருநாதர் நானுமவர்

தாளினை நீங்குவதும் இல்.

 

BKR:

@SKC,

தும்பிக்கை யான்மீது

          நீங்காது நீவைத்த

நம்பிக்கை காக்கும் உனை

 

SKC:

@BKR !

வாழும் இவ்வாழ்வில்

வழி நடத்துவதென்னை

வேழ முகத்தோன் துணை

 

Rali:

@BKR

தளைபிழை நான்காணும்

      முன்நீ திருத்தல்

விளையாட்டோ உந்தனுக்கு

      சொல்.

 

Suresh:

தேடிப்பிடித்து சொல்போடு முன்னே

ஓடிப்பிடித்து குறைகூறல் என்னே

நாடிப்பிடித்து நல்லகவி யமுதம்

கூடிப்பருகி குலவுவோம் கண்ணே

 

Suresh:

ஓமென்ன ஒலியா சொல்லா அறிந்திலனே

நாமென்ன உருவா அறிவா தெளிந்திலனே

நீ எந்தன்  குருவா பரமா உணர்ந்திலனே

தாயென்றே அறிவேன் அரனே உன்சரணே.

 

BKR:

@சுரேஷ்

அரனைத் தாயென் றறிந்தபின் வேறு

அறிதற்கொன் றுண்டோ புகல்.

 

SKC:

வாடிய பயிர் கண்டு

வாடும் குணம் விடுத்து

மூடு பனி வாழ்வில்

முயங்கியே இம்மாந்தர்

ஓடி அங்கிங்கு

உடல் இளைத்தே அலைந்து

வீடு மனை வாங்கி

வீணடித்து தம் வாழ்வை

காடு வழி போகும்

காட்சியைக் கண்டு உனைத்

தேடியே சரணடைந்தேன்

தென்மதுரை நாயகியே !