ராலி க. நி. தெக்காலம் #403
ஊட்டி வளர்க்கும்
உடம்புக்கு உள்ளேயும்
ஏட்டில் எழுதா
மறையின் ஒலியிலும்
நாட்டியமாடும் பொருளறிய
ராலி பேய்வாழ்
காட்டினில் ஆடுவானை
காண்ப தெக்காலம்?
Gopi:
கல்லெரிந்தால் கைலாயம்.
காலைவைத்தால் கைவல்யம் .
மகனிடமிருந்து மஹாவாக்யார்த்தம்.
கட்டிப்பிடித்தால் காலனுக்கும் உதை.
பெண்ணுக்கு தன்னில் பாதி.
ஆனால் அவளுக்கோ குரு.
இவன் முரண்பாட்டின் முழு அவதாரமோ!!!
BKR:
புசிப்பது திருவோட்டில்
வசிப்பது சுடுகாட்டில் எனினும்
மதுரைக்கு மன்னனவன்
மலையரசன் மருகனவன்
மலர்மகள் கேள்வனாம்
மாலுக்கு ஒரே மைத்துனன்.
வேத முதல்வனுக்கு
முரண்பாடும் வேடிக்கை