அஞ்சதால் அறியக்காணும்
ஆனந்த நடனநாதன்
நஞ்சினைத் தரித்தநாதன்
ஞானியர் ஏத்தும்நாதன்
நஞ்சுகொள் நாகம்தன்னை
அங்கத்தே அணிந்தவாறே
பிஞ்சிலே பழுத்தவன்கண்
பிரணவம் செவியுணர்ந்து
விஞ்சிடும் மகிழ்வினாலே
விரிநடம் புரிவோன்நம்மை
அஞ்சிடேல் என்று கூறி
அருகிலே நின்றிருக்க
கொஞ்சமும் கவலையேது
குறைகளும் ஏதெமக்கு
நெஞ்சிலே நிறைவுகொண்டு
நாளுமே வாழ்வோம்நாமே.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின். (திருக்குறள்)
ஆணின் அரும்பிறவி யாவுள பெண்மையைப்
பேணிப் பெருமை பெறின். (புதுக்குறள்)
மூலம் மறந்த அயன்தலையில் குட்டிய
வேலன் செயலும் விளையாட்டே -நீலகண்டன்
பத்தினியின் சோதரர்க்குப் புத்திர னாம்அயனின்
அத்தைமகன் தானே குகன்