ராலி க. நி. தெக்காலம் #156
வாயில் பொய்ச் சொல்
பேசி ஒரு நாளும்
கோயில் வாசல் மிதியாது
வாழ்ந்து பின்
நோயில் படுத்துச் சாவார்
போலிராது ராலி
பேயின் முலையுண்டானை
போற்றுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #157
சொந்த புத்தி கொண்டு
சாத்திரம் கற்காது
எந்த நற்பெரியோர்
சொல்லும் கேளாது
மந்தமாய்ப் புண்ய
மின்றிச் செத்திராது
கந்தன் கழலடி ராலி
கருதுவ தெக்காலம்?
ராலி க. நி. தெக்காலம் #158
இச்சை கொண்டு அற்பப்
பொருள் சேர்த்துக்
கொச்சை இழிமொழி
அற்பர் சங்கம் சேர்ந்து
மிச்சமீதியிலாது புண்ய
மழித்துச் செத்திராது
பச்சை மாமலையை
ராலி பணிவ தெக்காலம்?