Rali – Apr 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #156

வாயில் பொய்ச் சொல்

    பேசி ஒரு நாளும்

கோயில் வாசல் மிதியாது

    வாழ்ந்து பின்

நோயில் படுத்துச் சாவார்

    போலிராது ராலி

பேயின் முலையுண்டானை

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #157

சொந்த புத்தி கொண்டு

    சாத்திரம் கற்காது

எந்த நற்பெரியோர்

    சொல்லும் கேளாது

மந்தமாய்ப் புண்ய

    மின்றிச் செத்திராது

கந்தன் கழலடி ராலி

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #158

இச்சை கொண்டு அற்பப்

    பொருள் சேர்த்துக்

கொச்சை இழிமொழி

    அற்பர் சங்கம் சேர்ந்து

மிச்சமீதியிலாது புண்ய

    மழித்துச் செத்திராது

பச்சை மாமலையை

    ராலி பணிவ தெக்காலம்?

Author: Rali Panchanatham

Great Guy

Leave a comment